' Medjugorje - Messages From Our Lady 2011 - Tamil

Our Lady Of Medjugorje

Messages From 2011 In Tamil

January 25, 2011
"அன்புள்ள குழந்தைகளே! இன்றும் கூட நான் உங்களோடு இருக்கின்றேன். உங்களை உற்று நோக்குகின்றேன். உங்களுக்கு எனது ஆசியை வழங்குகின்றேன். இந்த உலகில் நன்மை பிறந்து, மனிதர்களின் உள்ளங்களில் சமாதானம் குடிகொள்ளும் என்று நான் நம்புகின்றேன். நீங்கள் எனது அழைப்பிற்கும், கடவுளின் அன்பிற்கும் உங்களது இதயங்களைத் திறந்து கொடுத்திருப்பதால், இவ்வுலகு மகிழ்ச்சியால் நிரம்பும். எனது கூக்குரலுக்கு 'ஆம்' என்று பதிலளித்த அநேகமான மக்களின் உள்ளங்களை தூய ஆவியானவர் ஆட்கொண்டு, அவர்களை மனமாறச் செய்கின்றார். உங்களுக்கு நன்றி கூற ஆசிக்கின்றேன். எனது வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி.
சனவரி 25 2011

February 25, 2011
"அன்புள்ள குழந்தைகளே! இயற்கை எழுச்சியுற்று, மரங்கள் துளிர்த்து அழகான வண்ண மலர்களையும், பழங்களையும் தரும் காலமிது. சிறிய பிள்ளைகளே! இவற்றைப்போலவே, நீங்களும் மனமாற்றமடைந்து, சாட்சிய வாழ்விற்கு தயாராக வேண்டுமென்றும், உங்கள் வாழ்வு பிறர் மனம் மாறுவதற்கு தூண்டுதலாகவும், அடையாளமாகவும் அமைய வேண்டும் என்றும் நான் ஆசிக்கின்றேன். நான் உங்களோடு இருக்கின்றேன். எனது மகன் இயேசுவிடம் உங்கள் மனமாற்றத்திற்காக பரிந்து பேசுகின்றேன். எனது வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி."
25 பிப்ரவரி 2011

25 March, 2011
"அன்புள்ள குழந்தைகளே! மனம் மாறுங்கள் என்று சிறப்பான விதத்திலே உங்களை நான் அழைக்கின்றேன். குழந்தைகளே, இன்றே உங்கள் இதயங்களில் புதுவாழ்வு மலரட்டும். கடவுளின் சித்தத்திற்கு "ஆம்" என்று கூறுங்கள். இதனால் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் கடவுளின் விருப்பத்திற்கு ஏற்றதாகவும், உங்களுக்கு நிறைவான மகிழ்ச்சியை அளிப்பதாகவும் இருக்கவேண்டும் என்று நான் ஆசிக்கின்றேன். எனது மகன் இயேசுவில் ஒன்றித்திருக்கும் என் இதயத்தின் தாயன்பும், சமாதானமும், எப்போதும் உங்களோடு இருப்பதாக. எனது வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி."
25 மார்ச் 2011


Last Modified 03/30/2011