' Medjugorje - Messages From Our Lady 2022 - Tamil

Our Lady Of Medjugorje

Messages From 2022 In Tamil

January 25, 2022
அன்புக் குழந்தைகளே, தனிமையிலிருந்து ஜெபிப்பதற்கு உங்களை நான் அழைக்கின்றேன். சிறிய குழந்தைகளே, சாத்தான் வலிமை வாய்ந்தவன் என்பதை மறவாதீர்கள். அவன் அதிகமதிகமான ஆன்மாக்களை தன்வசம் இழுக்க விரும்புகிறான். ஆகையால்தான், நீங்கள் விழிப்போடு இருந்து ஜெபத்திலும் நன்மை செய்வதிலும் உறுதியோடு இருக்க வேண்டும் என்று அழைக்கின்றேன். நான் உங்களோடு இருந்து, தாயன்போடு எனது அருள் வரங்களை உங்கள் மீது பொழிகின்றேன். எனது அழைப்பிற்கு பதிலளித்தமைக்கு நன்றி. ஜனவரி 25, 2022

February 25, 2022
அன்புக் குழந்தைகளே, உங்களோடு இணைந்து ஜெபிப்பதற்காக நான் உங்களுடன் இருக்கிறேன். சிறிய குழந்தைகளே, சாத்தான் நிலைத்து நிற்காதபடிக்கு ஜெபத்தில் எனக்கு உதவுங்கள். மரணம், வெறுப்பு மற்றும் பயம் ஆகிய அலகையின் சக்தி பூமியை சந்தித்துள்ளது. எனவே, பிள்ளைகளே, கடவுளிடம் திரும்புங்கள். கடவுள் இல்லாத இந்த உலகில் தாழ்த்தப்பட்ட, ஏழை மற்றும் குரல் இல்லாத அனைவருக்காகவும் தன்னலம் துறந்து, நோன்பிருந்து ஜெபியுங்கள். குழந்தைகளே, நீங்கள் கடவுளிடம் திரும்பி வந்து அவரது கட்டளைகளை கடைபிடிக்காவிட்டால் உங்களுக்கு எதிர்காலம் இல்லை. உங்களுக்கு வழிகாட்டுவதற்காக அவர் என்னை உங்களிடம் அனுப்பினார். எனது அழைப்பிற்கு பதிலளித்தமைக்கு நன்றி. பிப்ரவரி 25, 2022

March 25, 2022
"அன்புள்ள குழந்தைகளே! உங்கள் அழுகையையும், அமைதிக்கான ஜெபங்களையும் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பல ஆண்டுகளாக சாத்தான் போர் நிகழ வேண்டுமென்று போராடி வருகிறான். அதனால்தான் உங்களை தூய வழியில் வழிநடத்த கடவுள் என்னை உங்களிடையே அனுப்பினார், ஏனென்றால், மனுக்குலம் குறுக்கு வழியில் சென்றுவிட்டது. கடவுளிடம் திரும்பி வந்து அவரது கட்டளைகளை கடைபிடிக்குமாறு உங்களை அழைக்கின்றேன். அதுவே இவ்வுலகில் உங்களுக்கு நன்மை பயக்கும். மேலும், உங்கள் மீது கொண்டுள்ள பேரன்பால் உங்களைக் காப்பாற்றி, புது வாழ்வுக்கு அழைத்துச்செல்ல விரும்பும் கடவுளுக்கு நீங்கள் செவிசாய்க்காததால் நீங்கள் நுழைந்துவிட்ட இந்த நெருக்கடியான சூழலில் இருந்து வெளிவர முடியும். எனது அழைப்புக்கு பதிலளித்ததற்கு நன்றி." மார்ச் 25, 2022

April 25, 2022
"அன்புக் குழந்தைகளே, உங்களை நான் உற்று நோக்குகையில் நீங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றீர்கள் என்பதை காண்கின்றேன். எனவேதான் கடவுளிடம் திரும்பி வரவும், இடைவிடாமல் ஜெபிக்கவும், ஜெபத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளவும் உங்களை நான் அழைக்கின்றேன். அப்போது, தூய ஆவியார் தம் ஒப்பற்ற அன்பினால் உங்களை நிரப்புவார். உங்கள் இதயம் மகிழும், உங்கள் நம்பிக்கை வளர்ச்சி பெறும், உங்கள் எதிர்காலம் சிறக்கும். மேலும், கடவுளின் இரக்கத்திற்கு நீங்கள் சாட்சிகளாக பிறர் முன் விளங்குவீர்கள். எனது அழைப்புக்கு பதிலளித்ததற்கு நன்றி." ஏப்ரல் 25, 2022

May 25, 2022
"அன்புக் குழந்தைகளே, உங்கள் ஒவ்வொருவருக்காகவும் கடவுளுக்கு நான் நன்றி கூறுகின்றேன். ஏனென்றால், உங்களோடு இந்நாள்வரை இருந்து உங்களை தூய வாழ்விற்கு அழைத்துச் செல்ல கடவுள் பணித்துள்ளார். சிறிய குழந்தைகளே, அமைதியை குலைத்து உங்களை குழப்பத்துக்கு உள்ளாக்க சாத்தான் விரும்புகின்றான். இன்னும் அதிக இடைவிடாமல் ஜெபியுங்கள். அப்போது, போர் மற்றும் பாகுபாடுகளை ஏற்படுத்தும் தீய சக்திகள் முறியடிக்கப்படும். மனுக்குலம் நன்மைகளால் நிரப்பப்படுவதற்காக, உயிர்த்த இயேசுவின் சமாதானத்தை கட்டியெழுப்பவும், அவரது மகிழ்ச்சியை கொண்டுசெல்லும் தூதுவர்களாகவும் விளங்குவீர்கள். எனது அழைப்புக்கு பதிலளித்ததற்கு நன்றி." மே 25, 2022


Last Modified 07/27/2022